March 16, 2020
கோவையில் கடந்த சில நாட்களுக்குமுன் CAA ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்டு வீடுதிரும்பிக்கொண்டு இருந்த இந்துமுன்னனி பிரமுகர் தாக்கப்பட்டார். இந்த நிகழ்வு கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியது. போலிசாரின் தீவிரவிசாரனையில் இந்தவழக்கில் கோவை கரும்புக்கடையை சேர்ந்த இருவரை போலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கரும்புக்கடையை சேர்ந்த நூர்முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலிசார் இன்று காலை அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தடயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, மேலும் இந்தவழக்கில் வேறுயாருக்காவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் போலிசார் சோதனை நடத்தி நூர்முகமது வீட்டில் உள்ளவர்களிடம் போத்தனூர் காவல் நிலைய போலிசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.