• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைதானவர் வீட்டில் சோதனை

March 16, 2020

கோவையில் கடந்த சில நாட்களுக்குமுன் CAA ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்டு வீடுதிரும்பிக்கொண்டு இருந்த இந்துமுன்னனி பிரமுகர் தாக்கப்பட்டார். இந்த நிகழ்வு கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியது. போலிசாரின் தீவிரவிசாரனையில் இந்தவழக்கில் கோவை கரும்புக்கடையை சேர்ந்த இருவரை போலிசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கரும்புக்கடையை சேர்ந்த நூர்முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலிசார் இன்று காலை அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தடயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, மேலும் இந்தவழக்கில் வேறுயாருக்காவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் போலிசார் சோதனை நடத்தி நூர்முகமது வீட்டில் உள்ளவர்களிடம் போத்தனூர் காவல் நிலைய போலிசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க