January 29, 2019
தண்டோரா குழு
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் என்று 8வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊர்வலமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.
பின்னர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். பணிஇடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் போராட்டத்தை ஒடுக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.