• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை

March 16, 2020 தண்டோரா குழு

கோவையில் தற்போது இஸ்லாம் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர வாகன சோதனையிம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னை பதிவு எண் கொண்ட குவாலிஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கத்தி மற்றும் அரிவாள்கள் இருந்துள்ளன. அதனை தொடர்ந்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்த மதுரையை சேர்ந்த பழனிகுமார், வீரசுபாஷ், சுரேஷ்குமார்,மனோபாலா, மணிகண்டன்,கார்த்தி என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் 6 பேரும் ஏற்கனவே மதுரையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சிலர் மத தலைவர்களை தாக்கும் எண்ணத்தில் கோவை வந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிடிப்பட்டுள்ள 6 பேரும் அது போன்ற திட்டத்துடன் கோவை வந்துள்ளனரா அல்லது கொலை வழக்கில் ஜாமினில் வெளி வந்துள்ளதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்களுடன் வந்துள்ளார்களா, அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க