• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அம்மா உணவகங்களில் முட்டையுடன் சேர்த்து இலவச உணவு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

April 15, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டையுடன் சேர்த்து உணவு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் 2140 பேருக்கு பரிசோதனை செய்ததில் 126 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நோய்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணியும்,வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.கோவையில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும்.தினமும் 15 அம்மா உணவகங்களில் 18000 பேர் சாப்பிடுகின்றனர். அம்மா உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கான செலவை கோவை மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முழுமையாக கொரோனா நோய் கட்டுப்பட பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 15 நாட்கள் கட்டுப்பாடாக இருந்து விட்டால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,கோவையில் அரசு மருத்துவமனை முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம் என தெரிவித்தார்.முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான பெரிய ஓட்டல்களில் ரூம் தருவதற்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட இருப்பதாகவும் முதுகலை மருத்துவ மாணவர்களை கவனமாக இருக்க சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். கோவையில் என்.95 முக கவசம் தேவையான அளவு இருக்கின்றது எனவும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தரமான உணவு கொடுக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கின்றோம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க