• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.22 ஆயிரம் கோடி வளன் சார் கடன் இலக்கு நிர்ணயம்

December 23, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கயின் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. வங்கிகளின் சேவை இத்துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்டத்தினை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும். வேளாண் தொழில்களுக்கு ரூ.8038.07 கோடி (35 சதவீதம்), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.9982.13 கோடி (43 சதவீதம்), இதர தொழில்களுக்கு ரூ.4945.26 கோடி (22 சதவீதம்) என மொத்த ரூ.22965.47 கோடியில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு வளன் சார் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ் ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி ஆற்றல் 11.72 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற கடன்வசதிகள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.

இவ்வாறு ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ராதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க