• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோனியம்மன் தேர் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

March 4, 2020 தண்டோரா குழு

கோவையின் காக்கும் தெய்வம் ஸ்ரீ கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு,கோவை ஒப்பனக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல், ஜமாத்தின் சார்பாக தேர்திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். இது சமூக நல்லிணக்க செயல்பாடாக உள்ளதாக பொதுமக்கள், ஜமாத்தாரை வெகுவாக பாராட்டி சென்றனர்.

இது குறித்து அத்தார் ஜமாத் நிர்வாகிகள் கூறும்போது,

கோவையின் புகழ்பெற்ற ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை பார்த்து தரிசிக்க பல்லாயிரக்கணக்கான, எங்களின் சகோதர, சகோதரிகளும் பெரியோர்கள், முதியவர்கள் என பலரும் கூடுகிறார்கள். இந்த திருத்தேர் விழாவை கானவரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் வழங்கி உதவுவதை பெருமையாக கருதுகிறோம், மேலும் கோவை எப்பொழுதும் மனிதனேயத்திற்க்கும் ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக விளங்கும் மாவட்டம் என்று கூறினார்கள்.

மேலும் படிக்க