• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதை இந்த ஆண்டு வழங்காதது ஏன்? பாஜக – அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக – துரைமுருகன் கேள்வி

January 26, 2019 தண்டோரா குழு

பாஜக – அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக, இவ்வாண்டுக்கான “கோட்டை அமீர் பதக்கத்தை” யாருக்கும் வழங்காமல் முதலமைச்சர் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க கருணாநிதி அறிவித்த கோட்டை அமீர் பதக்கத்தை இந்த குடியரசு தின விழாவில் வழங்காமல் புறக்கணித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகரத்தைச் சேர்ந்த கோட்டை அமீர், மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு, இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று அயராது பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது இன்னுயிரைப் பறி கொடுத்தவர்.

நாட்டின் ஒற்றுமைக்கான அவரது பணியினைப் பாராட்டி, அவர் பெயரில் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டு, அந்தப் பதக்கம் ஒவ்வொரு வருடமும் சமய நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஒருவருக்கு, குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என 15.5.2000-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்தப் பதக்கம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி- இப்பதக்கம் பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொடுக்கப்படுகிறது.

வருகின்ற தேர்தலில் அமையப் போகும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாகவும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்தும் ‘கோட்டை அமீர் பதக்கத்திற்கு’ இந்த வருடம் யாரையும் தேர்வு செய்யாமலும், அந்தப் பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.’வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உன்னதக் கோட்பாட்டின் ஒரு அடையாளமாக கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிலேயே இப்படியொரு வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவரை இழிவுபடுத்தியிருப்பதும், சமய நல்லிணக்க உணர்வை கொச்சைப்படுத்தியிருப்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆகவே, சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவரை ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு’ தேர்வு செய்து அவருக்கு அந்தப் பதக்கத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூரும் வகையில் கோட்டை அமீரின் 25-வது ஆண்டு மறைவு தினத்தை அரசு விழாவாக நடத்திட வேண்டும்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க