• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும் – ஜவாஹிருல்லா

January 18, 2019 தண்டோரா குழு

கோடநாடு விவாகரத்தில் முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கோவையில் மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் மத்திய அரசு இடஒதுக்கீடு செய்ததைக் வன்மையாக கண்டிக்கிறோம். இது சமூக நீதிக்கு எதிரான ஒன்று. கல்வியிலும் ,சமூக ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு தான் இடஒதுக்கீடுகளே தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் காலதாழ்த்தாமல் விடுவிக்க வேண்டும். அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளைக் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பினர் முஸ்லீம்களைக் குறிவைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் கோடநாடு விவாகரத்தில் முழுமையாக விசாரணை நடைபெற வேண்டுமென்றால்,முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும்..எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க