• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடநாடு விவகாரத்தில் ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் – மேத்யூஸ் சாமுவேல்

January 23, 2019 தண்டோரா குழு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் உரிய நேரத்தில் ஆதாரங்கள் வெளியிடப்படும் என தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலளிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை வந்துள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்ஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, எதுவும் திட்டத்துடன் சென்னை வந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆம், ஒரு திட்டத்துடன் தான் வந்திருப்பதாக சாமுவேல் பதில் அளித்தார். தொடர்ந்து கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கூறி வருவது குறித்து மாத்யூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சாமுவேல் பதில் அளித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோர இருப்பதாவும் கோடநாடு விவகாரம் தொடர்பாக தன்னிடம் பல்வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் கூறிய அவர் தான் சொல்லிக் கொடுத்து சயன் மனோஜ் பேசவில்லை.கேரளாவில் இருக்கும் சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக்கொள்ளலாம். தன்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என மேத்யூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க