• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேக் – கோவை கே.ஆர்.எஸ். பேக்கரி புது முயற்சி

December 19, 2020 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் கே .ஆர்.எஸ்.பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது.இதில், மருத்துவர்கள்,செவிலியர்கள் ,காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக தத்ரூபமாக உருவாக்கிய கேக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கே.ஆர்.எஸ். பேக்கரி நிறுவனத்தினர் கேக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற கேக் கண்காட்சியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தனி நபர் இடைவெளி ,முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கேக்குகளை உருவாக்கி உள் ளனர். இன்று துவங்கி வரும் 31 ஆம் தேதி நடைபெற உள்ள இதில், பிளம் கேக்,ப்ரூட் கேக்,வால்நட் கேக் உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மருத்துவர் ஒருவர் கையில் தடுப்பூசி யுடன் இருப்பது ஒன்றும் அந்த கேக்கில் சானிட்டைசர் மற்றும் முக கவசம் போன்ற வடிவமைப்பும் மற்றும் அதில் காவல்துறையினர் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் நிற்பது போன்று தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். சுமார் 10 கிலோ அளவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது குறித்து கே.ஆர்.எஸ்.பேக்கரியின் உரிமையாளர் நரேஷ் கூறுகையில்,

கடந்த சில மாதங்களாக சுணக்கமாக இருந்த பேக்கரி வர்த்தகம் தற்போது மெதுவாக மீண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதையொட்டி நடைபெறும் இந்த கேக்குகள் கண்காட்சி பொதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க