• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா நிவாரண பணி – அரிசி மூட்டையை சுமந்த கோவை வட்டாச்சியர்

April 5, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், உணவின்றி தவிக்கும் வட இந்தியர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சமுதாய கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவாக கோவை கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 750 கிலோ அரிசியும், இதே போல ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா அசோசியேசன் 750 கிலோ அரிசியும், கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 2250 கிலோ அரிசியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் வழங்கினர். இந்த அரிசிகள் வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசை மூட்டைகளை இறக்கி வைக்கும் பணி நடைபெற்ற போது, வடக்கு வட்டாச்சியர் மகேஷ்குமார் அரிசி மூட்டைகளை தோளில் சுமந்து சென்றார். வட்டாச்சியரின் இந்த செயல் பாராட்டை பெற்றிருப்பதோடு, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க