• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரொனா” நிவாரண நிதிக்கு” கோவை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை ரூ 70 லட்சம் நன்கொடை

April 4, 2020 தண்டோரா குழு

கொரொனா” நிவாரண நிதிக்கு”
கோவை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை சார்பாக ரூ 70 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

கொரொனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பெறும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து அரசாங்கங்களும் மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்து போராடி வருகின்றன. குறிப்பாக இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்திய அரசும் தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த அறப்பணிக்கான பங்களிப்பாக தமிழக முதலமைச்சரின் கொரொனா நிவாரண நிதிக்காக கோவை எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 70 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகையினை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி வழங்கினார். கோவை எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பணியாற்றிவரும் மருத்துவர்கள்,பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க