February 10, 2020
கோவை நவ இந்தியாவில் உள்ள, எஸ்.என்.ஆர்., கலையரங்கில், கோவை கல்ச்சுரல் அகாடமியின் 18 வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ஓவியம், வினாடி வினா, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர், கல்ச்சுரல் அகாடமியை சேர்ந்த, 120 குழந்தைகள் பங்கேற்ற, பாட்டு, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாடகி எஸ்.பி.சைலஜா, கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை, கோவை கல்ச்சுரல் அகாடமியின் நிர்வாக இயக்குனர் நவீன்குமார் செய்திருந்தார்.