March 22, 2020
கோவையில் 200க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையை பொறுத்தவரை கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி இன்று ஒருநாள் முழுவதும் கோவை ஓட்டல்கள் இயங்காது என,கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.