• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையில் பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி வாங்கிய இலவச சேவைக்கான வாகனம்

January 30, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவர்களால் திரட்டிய நிதியை கொண்டு கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சேவைக்கான வாகனம் வாங்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 31வது ஆண்டு விழாவையொட்டி கண்ணைகவரும் விதமாக நடனங்களும்,விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது .இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளியில் கிராமத்தில் கொண்டாடுவது போல் நம்ம கிராமம் என்ற திருவிழாவானது நடைபெற்ற நிலையில் இதில் மாணவர்களால் திரட்டிய நிதியினை கொண்டு கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சேவைகளை செய்யும் வகையில் கேன்சர் பவுன்டேஷனுக்கு நன் கொடையாக வாகனம் வழங்கபட்டது.

இதை தொடர்ந்து கேன்சர் பவுண்டேசனின் நிறுவன அறங்காவலர் டாக்டர் பாலாஜி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். இந்நிகச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க