• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஷ்புவின் கடவுச் சீட்டைப் புதுப்பிக்க மறுத்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

January 7, 2017 தண்டோரா குழு

நடிகை மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கடவுச் சீட்டைப் புதுபிக்க மறுத்த விவகாரத்தில் சென்னை மண்ட கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) கூறியதாவது:

“கடந்த 2௦12ம் ஆண்டு சென்னை கடவுச் சீட்டு அலுவலக அதிகாரிகள் எனது கடவுச் சீட்டைப் புதுப்பித்துத் தந்தனர். இது 2௦22ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததால் எனது கடவுச் சீட்டின் பக்கங்கள் நிரம்பிவிட்டன. மீண்டும் வெளிநாடு செல்வதற்குப் பக்கங்கள் இல்லாததால் கூடுதல் தாள்கள் இணைத்துக் கொடுக்கும்படி விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால், அதிகாரிகள் 2௦11ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்து எனது கடவுச் சீட்டைப் புதுப்பிக்காமல் நிராகரித்தனர்.

இதனால், மீண்டும் குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் திட்டம் தடைப்படுகிறது. மண்டல அதிகாரிகளின் கவனத்திற்கு பல கடிதங்கள் கொடுத்ததும் அவர்கள் கண்டுக்கொள்ளாததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். அதை விசாரித்த நீதிபதிகள் சென்னை மண்டல கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க