• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகள் காப்பகத்திற்கு உணவு உடை வழங்கிய ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர்

December 14, 2016 தண்டோரா குழு

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் கோவையிலுள்ள அனாதைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு உடை வழங்கினர்.

கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆசாத் நகர் வட்டமும், சமூகசேவை பிரிவும் இணைந்து கோவை போத்தனூரில் உள்ள Family for children குழந்தைகள் காப்பகம் மற்றும் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மெர்ஸி ஹோம் ஆகிய காப்பகங்களுக்கு சென்று உணவு மற்றும் உடைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் வட்ட ஊழியர்கள் குடும்பத்தோடும் பெண்கள் பிரிவினரும் கலந்து கொண்டனர். உணவு மற்றும் உணவுகளை வழங்கிய பின்பு காப்பகங்களில் பராமாரிக்கப்பட்டு வரும் அனாதைகளும், மனவளர்ச்சிக் குன்றியவர்களும், சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களோடு கலந்துரையாடல்களை மேற் கொண்டனர். மேலும், அங்குள்ள ஊழியர்களிடத்திலும் வாழ்த்து சொல்லி அவர்களின் தியாகத்தை பாராட்டி வந்தனர்.

இது குறித்து JIHன் சமூகசேவை பிரிவு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில்,

சமூகத்தில் தேவையுடையோரை அடையாளம் கண்டு நம்மால் இயன்ற பொருளாதரா பங்களிப்புகளை செய்ய வேண்டும் எனவும் தேவையுடைய நபர்களுக்கு குறைந்தபட்சம் நம்மாலான ஆறுதல்களையும், வழி காட்டுதல்களையும் வழங்கலாம் எனவும் கூறினார். மேலும். வாய்ப்பிற்கேற்ப நம்மில் பலரும் இது போன்ற மறுவாழ்வு மையங்களுக்கு சென்று வர முயற்சி செய்வதுடன் , நம்மாலான பொருளாதார உதவிகளையும் செய்ய முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க