February 7, 2020
குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட 82வது வட்ட கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப் பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் சார்பில் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட
82வது வட்ட கழகத்தின் சார்பில் கோவை மாநகர மாவட்ட இளைஞரிணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், மற்றும் 82வது வட்ட கழகத்தின் பொறுப்பாளர் பதுருதீன் தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஜமாஅத்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.இதில்,தொழில் நுட்பஅணி் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சன்பர், ஏஎஸ்எப் அப்பாஸ், இலியாஸ், ஏகே.ராஜா, தெளபிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்