• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

January 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் 70 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவை சரவணம்பட்டியில் உள்ள விமல் ஜோதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மைம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மைம் நிகழ்ச்சி மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சிறு நாடகமாக மாணவர்கள் நடத்தினர். இந்நாடகம் பார்ப்போரை பரவசப்படுத்தியது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க