• Download mobile app
26 Jun 2025, ThursdayEdition - 3424
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கிருஷ்ணகிரியை சென்றடைந்த பிரமாண்ட கோதண்டராமர் சிலை

January 17, 2019 தண்டோரா குழு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை பிரமாண்ட கோதண்டராமர் சிலை அடைந்துள்ளது. இதனை அறிந்த மக்கள் சிலை மீது ஏறி வழிபட்டதுடன் சிலையில் தங்கள் பெயர்களையும் எழுதினர்.

பெங்களூரு கோதண்டராம சுவாமி தேவஸ்தான கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான தெற்கு பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை கொரக்கோட்டை குன்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரே கல்லில் கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை 380 டன் எடை கொண்டயும் 64 அடி உயரம் கொண்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அன்று பாறை வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 240 டயர்கள் கொண்ட சரக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பல்வேறு இடையூறுகளைக் கடந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை கொண்டு செல்லப்பட்ட லாரியை சூழ்ந்து கொண்டனர். சிலை மீது ஏறிய அவர்கள் கற்பூரம் கொளுத்தி வழிபட்டனர்.அவர்களை போலீசார் கீழே இறக்கினர். சிலை அங்கு நிற்பதை அறிந்து அனைவரும் குடும்பத்துடன் படையெடுத்தனர்.

மேலும் தங்கள் பெயர்களை சிலை மீது எழுதினர். பயணம் தொடர சில கட்டிடங்கள் இடையூறாக இருப்பதுடன், பாம்பாறு பாலமும் சேதமுற்று இருப்பதால் சிலையுடன் லாரி அங்கேயே நிற்கிறது. லாரி செல்வதற்காக அணை பாலத்துக்குக் கீழே உள்ள தரைப்பாலம் வலுவூட்டப்பட்டு வருகிறது.

மேலும் ஊத்தங்கரை நகரப்பகுதியில் குறுகிய அளவு சாலை என்பதால் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றகோரிக்கை வைத்துள்ளது. ஊத்தங்கரை நான்கு ரோடு சந்திப்பில் உள்ள ரவுண்டானாவை சிறிது அகற்றி பின் கட்டி தருவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிலையை ஏற்றி செல்லும் லாரி சாமல்பட்டி ரயில்வே தரைபாலத்தை கடக்க இயலுமா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆய்வுக்கு பின்னரே சாம்பல்பட்டியை கடக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இரு நாள்களுக்கு சிலை அங்கேயே இருக்கும் எனக் கூறப்படுகிறது. போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க பெங்களூரு – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க