• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி நீர் திறப்பு வழக்கை ஜூலை 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

March 21, 2017 தண்டோரா குழு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காவரி நடுவர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில், ஏற்கனவே பிறப்பித்து இருந்த உத்தரவின்படி கர்நாடகா தினமும் 2000 கன அடிநீரை தமிழகத்திற்கு திறந்தவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஜூலை 11ஆம் தேதி வரை தினமும் 2000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் படி நீர் வழங்காத கர்நாடகா, 2480 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க