• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலியை முதலில் விஷம் அருந்த சொல்லிவிட்டு தப்பித்த காதலன்

April 19, 2017 தண்டோரா குழு

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பல்லவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஜயபிரபு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அப்போது, விஜயலட்சுமியை முதலில் விஷம் அருந்தி சொல்லியிருகிறார் விஜயபிரபு அவரும் காதலரை நம்பி விஷம் அருந்தியுள்ளார். ஆனால், விஜயபிரபு விஷம் அருந்த மறுத்துவிட்டார்.எனினும், அவர் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மகளை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயபிரபு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க