• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலனுடன் போனில் பேசியதால் மகளை சுட்டுக்கொன்ற தந்தை

May 13, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் காதலனுடன் தொலைபேசியில் பேசிய மகளை, தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்பாலில் வசித்து வருபவர் சீமாராஜ். இவருக்கு ரூபி என்ற 18 வயது உள்ளார். இவர் இப்ராஹிம் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த ரூபி தனது காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சீமாராஜ் மகளை துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். இதில் முகம் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க