• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காணொலிக் காட்சி மூலம் ஆஜராகவுள்ள சசிகலா

May 4, 2017 தண்டோரா குழு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், காணொலிக் காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி சசிகலா மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரகிரஹாவில் உள்ள சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வந்த போது சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஏற்றார். மேலும், இதுதொடர்பாக கர்நாடக சிறைத்துறை, உள்துறை ஆகியவற்றிடம் அனுமதியைப் பெற்று அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.மேலும் இரண்டு வாரத்தில் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க