• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காகிதங்கள் விலையேற்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் – அச்சகத்தார் சங்கம் அறிவிப்பு

March 29, 2022 தண்டோரா குழு

கோவையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து காகிதங்கள் விலையேற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை அச்சகத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவையில் நிருபர்களிடம் கோவை அச்சகத்தார் சங்கத் தலைவலர் நாசர், துணைத் தலைவர் கனகராஜ், செயலாளர் ஜமாலுதீன், துணை செயலாளர், கணேஷ் ஆகியோர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் (பிரிண்டிங் பிரஸ்) செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சிவகாசிக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவில் அச்சகங்கள் செயல்படுகின்றன. இத்தொழிலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறோம்.

இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் ரூ.2,500 என இருந்த ஒரு ரீம் காகிதத்தின் விலை ரூ.5 ஆயிரமாக விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் காகிதத்தின் விலை ரூ.5 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சகங்களிலும் ஆர்ட் காகிதம் உள்பட அனைத்து விதமான காகிதங்களின் விலையும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.

காகிதங்களின் விலை உயர்வை பொருத்து அச்சகங்களில் விலை உயர்த்தப்படும். எனவே, இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொண்டு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பெரு நிறுவனங்கள் எப்போதும்போல் ஆதரவளிக்க வேண்டும். காகிதங்களின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சார்பில் காகித உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அரசு அச்சகங்களில் உபரியாக உள்ள வேலைகளை எங்களுக்கு வழங்க வேண்டும்.

அச்சகங்களுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மூலப்பொருள்கள் விலையேற்றதால் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அச்சகத் தொழிலை தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் படிக்க