• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்த அமைச்சர்

December 18, 2020 தண்டோரா குழு

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் 13 மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 35.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் 5 என 18 வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவ்வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பயனற்ற கல்குவாரிகளை கண்டறிந்து மாநகர பகுதிகளில் சேகரமாகும் கட்டிட கழிவுகளை கொண்டு குவாரிகளை புணரமைத்து பயனுள்ள நிலமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு அதற்காக கட்டிட கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் மண்டலத்திற்கு ஒன்று எனும் வீதத்தில் 5 வாகனங்கள் வாங்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க