• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கழிப்பறை கட்டாதவர்களின் காலில் விழுந்த நகராட்சி ஆணையர்!

April 13, 2017 தண்டோரா குழு

புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, கழிப்பறை கட்டாத பயனாளிகளின் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கழிப்பறையை கட்டுமாறு, கோரிக்கை விடுத்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்காக முதல் கட்டமாக உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 952 பயனாளிகள் கண்டறியப்பட்டு கழிப்பறை கட்டிக் கொள்ள அவர்களுக்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
இதில், 234 பேர் கழிப்பறை கட்டியதால் அவர்களின் வங்கிக் கணக்கில் இறுதி தவணை தொகை செலுத்தப்பட்டது.248 பயனாளிகள் கழிப்பறை கட்டி வருகின்றனர். ஆனால் முதல்தவணையை பெற்ற 470 பேர் இதுவரை கழிப்பறை கட்ட ஆரம்பிக்கவில்லை.

அரசின் நிதியை பெற்றபின்னரும் கழிப்பறை கட்டாமல் காலம் கடத்துவது இத்திட்டத்தின் நோக்கத்தை பாதிக்கும் செயலாகும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்தனர்.

இதையடுத்து அவர்களை கழிப்பறையை கட்ட வைக்க வேண்டுமென்றுஉழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் நேற்று, கவுண்டன்பாளையம், லாஸ்பேட்டை வார்டுகளில் உள்ள பயனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று கழிப்பறை கட்டாதவர்களின் காலில் விழுந்து, கட்டாயமாக கழிப்பறை கட்டக் கோரியும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்தரைத்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க