• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் இருவர் கைது

January 18, 2019 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டபகலில் நகை கடைக்கு சொந்தமான நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை திருப்பதி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 7 ம் தேதி கல்யாண் ஜூவல்லரியின் ஊழியர்கள் திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரம் கல்யாண் ஜூவல்லரி நோக்கி கிட்டத்தட்ட 350 சவரன் தங்க நகையும்,243.320 கிராம் வெள்ளி பொருட்களையும் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது காகா சாவடி அருகே உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதி அதில் இருந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தினர் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர்.

காருக்குள் இருந்த கல்யாண் ஜுவல்லரி ஊழியர்களை வெளியேற்றி காரை கடத்திச் சென்றனர். பின்னர் காருக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்துக் கொண்டு காரை கோவையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் கோவை மாவட்ட போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருடி சென்ற 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களை திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நகைகளை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரசூல் என்பவரின் மகன் பைரோஜ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.அதேபோல கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்களில் ஒரு சிலவற்றை தன்னுடைய கூட்டாளிகளுக்கு கொடுத்த பைரோஜ், 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை தன்னுடைய தாய் சமா, சகோதரர் அகமது சலீம் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் நகைகளை வீட்டில் வைத்திருந்தால் போலீசார் வந்து பறிமுதல் செய்து விடுவார்கள் என்று கருதிய சமா, அகமது சலீம் ஆகியோர் நகைகளுடன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி பல்வேறு ஊர்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். இப்படி சுற்றித்திரிந்தவர்கள் நேற்று திருப்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இன்று கோவை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கோவை மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க