• Download mobile app
20 May 2026, WednesdayEdition - 3752
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

July 20, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை கணபதி, வெள்ளக்கிணறு பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்கள் பதிவு செய்து பராமரிப்பது, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து ஆவாரம்பாளையம் பகுதியில் கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.மேலும்,பொதுமக்கள் குப்பைகளை சாலை மற்றும் சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத்தொட்டியில் கொட்டவேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகன சுந்தரி, செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க