• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார் – ஆர்.எஸ்.பாரதி

May 8, 2017 தண்டோரா குழு

தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3- ம் தேதி தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்று தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்கவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் உடல் நலம் தேறி வீடு திரும்பிய அவர் , கடந்த சில மாதங்களாக கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை.

இந்நிலையில் வரும் ஜூன் 3- ம் தேதி அவரது 94 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. திமுக சார்பில் மிக பிரம்மாண்டமாக வைர விழாவாக விழாவினை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.
இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்த கொள்ள உள்ளதாக தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்கவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே பல மாதங்களுக்கு பிறகு கருணாநிதி விழாவில் கலந்து கொள்ள உள்ளதால் அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார் என ஆர்.எஸ் பாரதி தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க