• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலிடம் நான் எப்போது ஜாக்கிரதையாக தான் இருப்பேன் – ரஜினிகாந்த்

April 5, 2017 தண்டோரா குழு

கமலிடம் நான் எப்போது ஜாக்கிரதையாக தான் இருப்பேன் என்று கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் நினைவேந்தலில் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கடந்த மார்ச் 19ஆம் தேதி லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.

இந்த நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், விஷால், கே.எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினிகாந்த் பேசுகையில்,

கமல் “தன்னுடைய வாழ்க்கையில் மூன்று பேரை தனது தந்தையாக கமல் நினைத்திருந்தார். ஒன்று மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், இரண்டாமவர் அவரது மூத்த அண்ணன் சாருஹாசன், மூன்றாமவர் சந்திரஹாசன். சாருஹாசன் அண்ணனுடன் பல படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், சந்திரஹாசன் அண்ணன் அவர்களை இரண்டு முறைதான் சந்தித்து உள்ளேன்’ என்றார். மேலும், கமலை போன்ற ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. கமல் கோபக்காரார் என்பதால் நான் அவரிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பேன். அவரை அவரது அண்ணன் சந்திரஹாசன் தான் வழி நடத்துவார். இப்போதைய நடிகர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களிடம் இருக்கும் பணம், சொத்து கூட கமலிடம் இல்லை என்று ரஜினி உருக்கமாக பேசினார்.

மேலும் படிக்க