• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரிக்கு 19ம் தேதி வருகிறார் பிரதமர் மோடி

December 16, 2017 தண்டோரா குழு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 19 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

வங்க கடலில் உருவான ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. ஏராளமான மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் பலர் பலியாகினர். இதற்கிடையில், புயல் நேரத்தில் கடலில் மீன் பிடிக்க சென்ற கேரள மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். இதனால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளார் என்றும் பிரதமரின் வருகை உறுதியான நிலையில் பயண திட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க