• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணபதிபுதூரில் சுகாதார மையம் கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு

May 10, 2022 தண்டோரா குழு

மாநகராட்சி வடக்கு மண்டலம் 29வது வார்டுக்குட்பட்ட கணபதிபுதூர்‌ பகுதியில்‌ சுகாதார மையம்‌ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கணபதி புதூர்‌ பகுதியில்‌ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி ஆகியோர்‌ துவக்கி வைத்த சுகாதார மையம்‌ கட்டும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌, செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, மண்டல குழு தலைவர்‌ வே.கதிர்வேல்‌, 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர்‌ ஆகியோர்‌ உடன் இருந்தனர்.

மேலும் படிக்க