• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள் – மோடி

February 7, 2019 தண்டோரா குழு

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலுரை அளித்ததார்.

அப்போது பேசிய அவர்,

எங்கள் ஆட்சி நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழைகளுக்காகவே நான் வாழ்கிறேன் அதற்காகவே நான் இங்கு நின்றுள்ளளேன். பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடத்திலும், மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கிறது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பாஜக வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது. 55 மாதங்களில் 13 கோடி எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கி உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன வாகன உற்பத்தியில் உலகின் 4 வது பெரியநாடு இந்தியா; மொபைல் போன் உற்பத்தியில் 2 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. 2 சகாப்தம் முடிந்துள்ளது ஒன்று காங்கிரசுக்கு முன் ( BC ) , வாரிசு அரசியலுக்குப்பின்(AD) நான் சொன்ன மாற்றங்கள் நடந்துள்ளது. நான் எப்போதும் உண்மையைத்தான் பேசுகிறேன். என்னை பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். என்னை விமர்சியுங்கள், நாட்டை விமர்சிக்க வேண்டாம். விமர்சனம் என்ற பெயரில் குறைகூறுவது தவறானது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது. தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 100 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமை தாங்குவதன் மூலம் இந்தியாவின் நற்பெயருக்கு காங்கிரஸ் களங்கம் ஏற்படுத்துகிறது. அரசியல் லாபத்திற்குகாக கற்பனை கதையை காங்கிரஸ் அவிழ்த்து விடுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டு வருகிறோம்.சவால்களை எதிர்கொள்வோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் படிக்க