• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்த ரஜினி

January 23, 2019 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட படம் மாபெரும் பெற்றது. இதையடுத்து, ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
நடிக்கவுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டன.அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளும் கஜா புயல் பாதிப்பின்போது நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை ரஜினி இன்று நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜினி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சமீபகாலமாக படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்த ரஜினி மீண்டும் அரசியல் பணிகளை துவக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க