• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்து தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது – செங்கோட்டையன்

April 18, 2017 தண்டோரா குழு

ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முயற்சிகள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 2௦க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்று கூடி அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் இன்று சந்தித்துப் பேசினர். அதன் பிறகு அமைச்சர்கள் இருவரும் தினகரனின் இல்லத்திற்கு சென்று இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது,” என்றார்.

மேலும் படிக்க