February 8, 2019 தண்டோரா குழு
மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளின் விவரங்களை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.