• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா வின் தூதராக 19 வயது சிரியா அகதி

June 27, 2017 தண்டோரா குழு

ஐ.நா வின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் நல்லெண்ணத் தூதராக சிரிய அகதியான முசூன் அல்மெலெஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2௦13ம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் தங்கள் பாதுகாப்பு கருதி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். தங்கள் தாய்நாடான சிரியாவை விட்டு வெளியேற விரும்பாமல் அங்கேயே சிலர் தங்கிவிட்டனர்.

உள்நாட்டு போரால் பதிக்கப்பட்ட சிலர் ஜோர்டான் நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் முசூன் அல்மெலெஹானும் ஒருவர். புலம் பெயர்ந்த அகதிகளின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

இது குறித்து ஐ.நா வின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் கூறுகையில்,

மறைந்த முன்னாள் பிரபல ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் சிறுமியாக இருந்த போது, ஐ.நா வின் ஆதரவை பெற்றிருந்தார். அவருடைய அடிச்சுவடிகளை முசூன் பின்பற்றி வருகிறார்” என்று கூறினார்.

“சிரியாவை விட்டு வெளியேறியபோது, என்னுடைய பள்ளி புத்தகங்களை என்னுடன் எடுத்து சென்றுவிட்டேன். அகதியாக இருந்தபோது, குழந்தைகள் சிறு வயதிலேயே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவது அல்லது வேலைக்கு அனுப்பப்படுவதை பார்த்துள்ளேன். ஆனால், ஐ.நா அமைப்புடன் பணிபுரிவது மூலம், குழந்தைகளில் கல்விக்கு குரல் கொடுப்பதுடன், அவர்களை பள்ளிக்கு அனுப்பவும் முடியும் என்று முழுமனத்தோடு நம்புகிறேன்” என்று முசூன் தெரிவித்தார்.

மேலும்,ஜூன் 20 ஆம் தேதி உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதியான முசூன் அல்மெலெஹான், யுனிசெப் எனப்படும் ஐ.நா வின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க