• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஐடி மாணவருக்கு 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்

December 2, 2017 தண்டோரா குழு

புதுதில்லி ஐஐடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மாணவர் ஒருவருக்கு 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

புதுதில்லியில் உள்ள ஐஐடியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று (டிசம்பர் 1) நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தியது. அதன் பிறகு, ஒரு மாணவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

இன்று (டிசம்பர் 2) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், NVIDIA, ஓரக்கல் இந்தியா உள்ளிட்ட 16 நிறுவனங்கள் மாணவ மாணவிகளுக்கு நேர்காணலில் நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொண்ட வேலையை வழங்கியது.

ஐ.ஐ.டி.யில் ஆண்டுதோறும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகம் நடந்து வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு முகாமின் முதல் சுற்று டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவடைகிறது. அதை தொடர்ந்து, ஜனவரி மாதம் மீண்டும் பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்துக்கொண்டு, மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது.

கடந்த ஆண்டு புதுதில்லி ஐஐடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை விட, இந்த ஆண்டு நடைபெறும் முகாம் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் 2016ம் ஆண்டில், பணி தேர்வுகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது. இந்த ஆண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில், பல பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டு, பலருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துக்கொண்டு சுமார் 350 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதில் 20 மாணவர்கள், 100,000 டாலர் மதிப்புள்ள பணியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க