• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏன் இந்த இரட்டை வேடம்? அதிமுகவிற்கு ஸ்டாலின் கேள்வி

January 10, 2019 தண்டோரா குழு

உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைப்போல், ராஜ்யசபாவிலும் நேற்று, இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அப்போது எதிர்த்து விழுந்த ஓட்டுக்கள் 7 மட்டுமே. முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்துவிட்டது. அதிமுகவும் எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும் என்று, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன்.அதைச் செய்யாத அதிமுக, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் BJPக்கு பாதம் தாங்கி நடப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க