January 10, 2019
தண்டோரா குழு
உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைப்போல், ராஜ்யசபாவிலும் நேற்று, இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அப்போது எதிர்த்து விழுந்த ஓட்டுக்கள் 7 மட்டுமே. முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்துவிட்டது. அதிமுகவும் எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும் என்று, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் சட்டத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டுவருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன்.அதைச் செய்யாத அதிமுக, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் BJPக்கு பாதம் தாங்கி நடப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.