• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

March 19, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பல மொழிகளில் தன் குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

தன் திரைபயணத்தில் எச்பிபி 50 வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர் தற்போது எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரிக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தனக்கும், சித்ராவுக்கும் மற்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இளைஞானி இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளாராம். அதில் இளையராஜா இசையமைத்த பாடலை மேடைகளில் பாடக்கூடாது என்றும் மீறினால் மிகப்பெரிய தொகையை அபராதமாக கட்டவேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

கடந்தவருடம் கனடாவில் தொடங்கி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் நடத்திய போது எதுவும் சொல்லாத இளையராஜா அமெரிக்காவில் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை.

இதனால் இனி அவரின் இசையில் வந்த பாடலை பாடமாட்டேன். அதைத்தவிர மற்ற எனது பாடல்களை பாடவிருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க