• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எரிவாய்வு, பெட்ரோல் விநியோகபிரச்சனைகள் குறித்து டுவிட்டர்,பேஸ்புக்கில் தெரிவிக்கலாம் – மத்திய அரசு

March 27, 2017 தண்டோரா குழு

எரிவாய்வு விநியோகம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வாடிக்கையாளர்கள் நேரடியாக புகார் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாய்வு விநியோகிப்பதில்காலதாமதம் போன்ற பிரச்னை, பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களிடம் தரமான பெட்ரோல்,டிசல் விநியோகப்பதில் பிரச்னை என்றால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணைய தளங்களில் புகார் செய்யும் புதிய வசதியை MoPNGeSevaஎன்ற பெயரில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை(மார்ச் 27), அறிமுகப்படுத்தினார்.

MoPNGeSevaஎன்ற இணைப்பில் வாடிக்கையாளர்கள் தங்கபுகார்களை நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம்.இதில் தெரிவிக்கப்படும் புகார்களை கண்காணிக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க வசதியாக இந்த வசதி 24 நேரமும் செயல்படும். அதே போல் இந்த புகார்களை அதிகாரிகள் மட்டுமின்றி பெட்ரோலிய துறை அமைச்சரும் நேரடியாக கண்காணிப்பர் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க