• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் சிகிச்சைக்காக அனுமதி

July 14, 2017 தண்டோரா குழு

ஓடிஸாவில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டையர்களுக்கு புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

ஓடிஸா மாநிலத்தின் கந்தாமால் மாவட்டத்திலுள்ள மிலிபாடா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஹனி மற்றும் சின்ஹா என்னும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அந்த குழந்தைகளின் தலை ஒட்டியிருந்தது. அதை பிரிப்பதற்காக புதுதில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தங்கள் பெற்றோருடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இந்த குழந்தைகளின் மருத்துவச் செல்விற்காக மாவட்ட நிர்வாகம் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. அதேபோல், மாவட்ட நோயாளிகளின் நலன்புரி கழகம் 25,௦௦௦ ரூபாய் வழங்கியுள்ளது. இது தவிர, சிகிச்சைக்கான அனைத்து செலவுகளை மாநில சுகாதார துறை ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்து உள்ளது.

மேலும், தேசிய இளைஞர் நலன் உதவி தலைவர் சௌம்யா சமன்டாரே மற்றும் நுபடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆயுஷ், அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரை அந்த குடும்பத்தினருடன் இருப்பர்.

மேலும் படிக்க