• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆர்- ஜெயலலதா- திமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

April 21, 2017 தண்டோரா குழு

ஜெ அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர்- ஜெயலலதா- திமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் தீபா அம்மா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கினார். தீபா பேரவையில் இருந்த மாதவன் அதில் இருந்து வெளியேறினார். பின் தீபாவுக்கு மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதவன் புதிய கட்சி துவங்குவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்த பின் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தார் மாதவன்.

அப்போது, எம்.ஜி.ஆர்- ஜெயலலதா- திமுக என்ற புதிய கட்சி துவங்குவதாக அறிவித்தார். பின்னர், எம்.ஜெ.டி,எம்.கே. என்ற பேனரை கட்டி தனது புதியக்கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

மாதவன் கட்சியின் கொடியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க