• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு ஒரு தேர்தலில் கூட திமுக வெற்றி பெற்றது கிடையாது – முக அழகிரி

August 25, 2018 தண்டோரா குழு

என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு ஒரு தேர்தலில் கூட திமுக வெற்றி பெற்றது கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து அவரது நினைவிடம் நோக்கி செப் 5–ந் தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்து இருந்தார்.
இதையடுத்து, மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 2வது நாளாக முக அழகரி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், மதுரை, ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,

செப்.5 பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுகொள்கிறார்கள் என்று எனக்கு தெரியும். பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர். பேரணிக்கு பிறகு திமுகவில் பெரிய ஆபத்து ஒன்று ஏற்படும். கருணாநிதி இருந்த போதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு தி.மு.க ஒரு முறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை. என்னை பற்றிய சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ஏற்கெனவே எனது மகன் துரை தயாநிதி பதிலளித்து விட்டார். தாய் கட்சியான திமுகவில் நான் சேர்வதில் எந்த தவறும் கிடையாது. திமுகவில் மீண்டும் இணைத்து கொண்டால் சேர்வேன். அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க ஸ்டாலின் செல்கிறார் எனக் கூறினார்.

மேலும் படிக்க