February 23, 2020 தண்டோரா குழு
எனக்கான பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்
– அருண் விஜய்
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதோடு தமக்கென உள்ள பாணியில் தொடர விரும்புவதாக பிரபல நடிகர் அருண் விஜய் கோவையில் தெரிவித்துள்ளார்.
துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய “மாஃபியா – பாகம் 1” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் அருண் விஜய் கோவையில் படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சழ்தித்து பேசினார்.
அப்போது அவர்,
Lyca Productions சார்பில் தயாரித்த இந்த படத்தை வெற்றிபடமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் எண்ணம் குறித்த கேள்விக்கு நல்ல குடும்ப கதை மற்றும் காமெடி கதைகள் அமைந்தால் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் தமக்கென்று தற்போது உருவாகியுள்ள இந்த ஸ்டைலை தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மல்ட்டி ஸ்டார் படங்களில் மீண்டும் நடிப்பது குறித்த கேள்விக்கு நல்ல கதையம்சம் இருந்தால் நடிப்பதில் தவறில்லை எனவும் அதே நேரத்தில் தமக்கென உள்ள பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதையும் தொடர வேண்டும் என தெரிவித்தார்.