• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எடை குறைந்தது ஆனால் கால் போனது

April 15, 2017 தண்டோரா குழு

உலகின் 5௦௦ கிலோ எடையுடைய பெண்மணிக்கு மும்பை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் உடல் எடை 25௦ கிலோ குறைந்துள்ளது. ஆனால் அவரால் இனி நடக்க முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இமான் அஹ்மத்(36) என்னும் பெண்மணி எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரை சேர்ந்தவர். அவருடைய உடல் எடை 5௦௦ கிலோவாக இருந்தது. அவரை எகிப்திலிருந்து இந்தியாவின் மும்பை நகரிலுள்ள சைபீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் முபாஸல் லக்டாவாலா, மார்ச் 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

“இமானால் எழுந்து உட்கார முடியும். அவருடைய தைராய்டு பிரச்சனை இப்போது சாதாரணமாக இருக்கிறது. அவருக்கு 11வது வயதில் ஏற்பட்ட பக்கவாத தாக்குதலால் அவருடைய கால்கள் செயலற்று போய்விட்டன. மேலும் 25 ஆண்டுகள் படுத்தே இருந்ததால் கால்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இனிமேல் அவரால் நடக்க முடியாது” என்று டாக்டர் முபாஸல் லக்டாவாலா, கூறினார்.

மேலும் அவருக்கு உடல் எடை குறைக்கும் சிகிச்சை முடிந்துவிட்டது. தற்போது நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை தொடங்கவுள்ளது.நரம்பியல் சிகிச்சைக்காக அவருடைய உடலை சி.டி ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவருடைய உடல் எடை அதிகமாக இருப்பதால் அந்த ஸ்கேனை செய்ய முடியவில்லை. அதனால் அவருடைய உடல் எடையை 5௦கிலோ குறைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அவருக்கு மருத்துவர்கள் முன்பு நடத்திய பரிசோதனையில் அவருக்கு அரிய மரபணு கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.நான்கு மாதங்களுக்கு பிறகு இமாமை அவருடைய நாட்டிற்கு அனுப்பலாம் என்று மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவருடைய நரம்பியல் சிகிச்சை முடியும் வரை அவரை மும்பை மருத்துவமையில் வைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க