• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை – நிதி அமைச்சர் ஜெயக்குமார்

April 29, 2017 தண்டோரா குழு

எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழக அமைச்சர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்துவதாக கூறுவது அப்பட்டமான பொய். இரு அணிகள் இணைய பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை தவிர பொதுமக்களின் கோரிக்கைகளை கட்சியினர் மூலம் மனுக்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தினமும் பெற்று வருகிறார்கள்.கட்சி தொண்டர்களிடமும் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மனுக்களை பெற்று வருகிறோம்.என்றார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும் படிக்க