• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதா? – தெற்கு ரயில்வே நிர்வாக விளக்கம்

December 7, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நீராவி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டதாகவும், கட்டணம் கடுமையாக உயர்ந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஊட்டி மலை ரயிலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மலை இரயில் ( Nilgiris Mountain Railway-NMR) தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் பாலிசி படி எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரெயிலையோ ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற முறையில் ஒரு குழுவிற்கு அல்லது சுற்றுலா ஏற்பாடு செய்வதற்காக அல்லது திருமண நிகிழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்றும் அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல chartered trip களை இயக்கி உள்ளது.

அத்தகைய chartered trip முறையிலேயே இந்த பயணம் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் படி இயக்கப்பட்டது. இதை NMR தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என கூறுவது முற்றிலும் தவறான புரிதல் இல்லாத இடபட்ட பதிவு ஆகும். இந்த ஒரு chartered trip க்கும் இரயில்வேயின் வழக்கமான NMR சேவைக்கும் சம்பந்தம் இல்லை.

இரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு உள்ளது. இதை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க