• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பியில் தலைவர்களின் பிறப்பு இறப்பு தினங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது

April 14, 2017 தண்டோரா குழு

உ.பியில் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளின் போது பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உ.பியில் நடந்த அம்பேத்கரின் 126 பிறந்தநாள் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத்,

“ நாட்டின் தலைவர்களை நினைவு கூறும் முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படுவதால் குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மாணவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. இதுமட்டுமின்றி, ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்பதுகூட மாணவர்களுக்கு புரிவதில்லை. ஆகையால் விடுமுறைக்கு பதிலாக குறிப்பிட்ட தலைவர்களின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

மேலும், வருடத்திற்கு குறைந்தது 220 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், இப்படி அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் ஆண்டுக்கு 130 முதல் 140 நாட்கள் வரைதான் பள்ளிகள் செயல்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, இனிவரும் நாட்களில் தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினங்களுக்கு பள்ளிகளில் விடுமுறை கிடையாது ” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும் படிக்க